தார்பாய் கொண்டு குடிசை பகுதிகளை திராவிட அரசு மறைக்கவில்லை.! முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

Default Image

நம் நாட்டில் சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வரும் போது, அம்மாநில குடிசை பகுதிகளை தார்பாய் கொண்டு மறைக்கும் வேலைகள் நடைபெற்றன. அப்படி திராவிட மாடல் அரசு எதனையும் மறைக்கும் அரசு இல்லை. – முதல்வர் ஸ்டாலின். 

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில் மற்ற மாநில அரசு பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், நம் நாட்டில் சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வரும் போது, அம்மாநில குடிசை பகுதிகளை தார்பாய் கொண்டு மறைக்கும் வேலைகள் நடைபெற்றன. அப்படி திராவிட மாடல் அரசு எதனையும் மறைக்கும் அரசு இல்லை. என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

கொளத்தூரில், ஜவகர் நகர் பகுதியில் 111.80 கோடி அரசு செலவில் 840 அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து இவ்வாறு பேசியுள்ளார்.

இதற்கு முன்னர் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத் வருகையில், அங்குள்ள ஒரு குடிசை பகுதியை மறைக்க சுவர் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை மறைமுகமாக குறிப்பிட்டு தான் முதல்வர் பேசியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்