கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

Published by
Venu

கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மறு ஆய்வு குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழு தாக்கல் செய்த  அறிக்கையில்,  தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து ஜூன் 10-ம் தேதி வரை உயிரிழந்தோரின் விடுபட்ட எண்ணிக்கை *444 என தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்தது.இந்த  மரணங்கள்  கொரோனா அறிக்கையில் நேற்று சேர்க்கப்பட்டதாக  சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால்  தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் விடுபட்ட எண்ணிக்கையும் சேர்த்து 3,144 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.அவரது வீடியோ பதிவில்,    தமிழ்நாட்டில் கொரோனாவே இல்லை என்று முதலில் மறைத்தது .கொரோனா மரணத்தை இந்த அரசாங்கம் மறைத்தது என்று நான் ஜூன் 15-ஆம் தேதி கூறினேன்.இது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டது .இதற்கு உரிய விளக்கத்தை அரசாங்கம் கூற வேண்டும் என்று கூறினேன்.நான் அரசியல் செய்வதாக கூறி பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.தமிழ்நாட்டில் தான் கொரோனா மரணவிகிதங்கள் குறைவு என்று தனது ஆட்சியின் சாதனையாக முதலமைச்சர் கூறி வந்தார்.சாவை சாதனையாக சொன்ன முதல் ஆள் இவராத்தான் இருப்பார்.இவர் கூறியது பொய் என்று அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரியவந்தது. மரணத்திலும் பொய் கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால் பழனிசாமி ஆட்சியாகத்தான் இருக்கும். 3 நாளில் கொரோனா ஒழிந்துடும், 10 நாளில் கொரோனா ஒழிச்சிடுவேன்னு பொய் சவால்களா விடுத்து வந்த பழனிசாமி ஆட்சியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.

 அரசு இப்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை மறைக்கிறது. மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம்? மறைக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமானதும், வேறுவழியில்லாமல் வெளியில் சொல்லி விட்டார்கள்.கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்  என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

1 hour ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

5 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

5 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

5 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

7 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

7 hours ago