ஊரகப் பகுதிகளில் நாளை முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்!

Published by
கெளதம்

தருமபுரி : ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார். மக்களுடன் முதல்வர் திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். இதில், பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை முதல்வரிடம் நேரடியாக முன்வைக்கலாம்.

இதற்காக, மாவட்ட அளவில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்களின் குறைகளைப் பதிவு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அந்தந்த அரசு அதிகாரிகள் நேரடியாக மக்களிடம் தகவல்களைப் பெறுவார்கள் மற்றும் விரைவாக தீர்வுகளை முன்மொழிவார்கள்.

இந்த திட்டத்தின் மூலம், அரசாங்கம் மக்களின் தேவைகளை விரைவாகக் கவனித்து, தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை (11.07.2024) வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் தொடங்கி வைக்கிறார்.

முதற்கட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்டத்தில்  நகர் பகுதிகளில் 2058 முகாம்கள் நடத்தி 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. இத்திட்டம் தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்தி விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு முறையை மேம்படுத்துவதோடு, மக்களின் நலனைப் பராமரிக்கவும், துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

17 minutes ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

1 hour ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

2 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

4 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

5 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

5 hours ago