ஊரகப் பகுதிகளில் நாளை முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்!

Published by
கெளதம்

தருமபுரி : ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார். மக்களுடன் முதல்வர் திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். இதில், பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை முதல்வரிடம் நேரடியாக முன்வைக்கலாம்.

இதற்காக, மாவட்ட அளவில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்களின் குறைகளைப் பதிவு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அந்தந்த அரசு அதிகாரிகள் நேரடியாக மக்களிடம் தகவல்களைப் பெறுவார்கள் மற்றும் விரைவாக தீர்வுகளை முன்மொழிவார்கள்.

இந்த திட்டத்தின் மூலம், அரசாங்கம் மக்களின் தேவைகளை விரைவாகக் கவனித்து, தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை (11.07.2024) வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் தொடங்கி வைக்கிறார்.

முதற்கட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்டத்தில்  நகர் பகுதிகளில் 2058 முகாம்கள் நடத்தி 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. இத்திட்டம் தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்தி விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு முறையை மேம்படுத்துவதோடு, மக்களின் நலனைப் பராமரிக்கவும், துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

19 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

23 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

37 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

49 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago