உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இன்றுடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் 100 நாட்களை நிறைவு பெறுகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு காணப்படும் என கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இதைத்தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டதின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டார். “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நான்கரை லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 100 நாட்களில் இரண்டு லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டதின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…