தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.
இன்று திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள விழாது செய்தியில், மகாராஷ்டிரா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் ,அவர்களுக்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! மகாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்,.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…