அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.எனவேமே 3-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் ஒரு சில மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பிரதமர் மோடி மே 3-ஆம் தேதிக்கு பிறகு நீட்டிப்பதா ? வேண்டாமா ? என்பதை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தான் பிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட நிலையில் ஊரடங்கு, கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025