#ElectionBreaking : வரும் 15-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் முதல்வர் பழனிசாமி…!

Default Image

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மேலும், அன்று மற்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்