ரூ.110 கோடி அளித்த அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றி.!

Default Image

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கடந்த 10 நாட்களில் 145 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 986 ரூபாய் நன்கொடையாக வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியமான ரூ.110 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306,42,10,558 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த நிதியை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்