வீட்டில் இருந்தபடியே  தமிழக அரசின் 1100 சேவை -தொடங்கி வைத்தார் முதலமைச்சர்  பழனிசாமி

Published by
Venu

மக்கள் வீட்டில் இருந்தபடியே சேவையை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

தற்போது வெவ்வேறு அரசு துறைகள் தங்களுக்கு என்று தனித்தனியாக துறைவாரியாக குறைதீர் மையங்கள் மற்றும் இணையதளங்களை செயல்படுத்தி வருகின்றனர்.மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் ,மாதாந்திர மனு நீதி நாள் ,விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் உள்ளிட்டவையும்,மாநில அளவில் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலமாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை ஏற்கும் சூழல் ஏற்படுகிறது.ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும் ,மாநில அளவிலும் வழங்கப்பட்டு வருகிறது.எனவே தமிழ்நாடு அரசு துறைகளில் கீழ் செயல்படும் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து குறைகளுக்கு  விரைந்து தீர்வு காணும் முறை தேவைப்படுகிறது.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து , தீர்வுகாண ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தை அமைப்பதின் அவசியத்தை உணர்ந்து,முதலமைச்சர் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவித்தார்.அதாவது மக்களின் குறைகளை தெரிவிக்க 1100 என்ற எண்ணை அழைத்து அரசின் சேவையை பெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.இந்நிலையில் மக்கள் வீட்டில் இருந்தபடியே சேவையை பெரும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.  பொதுமக்கள் தங்களது குறைகளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

24 minutes ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

2 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

2 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

3 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

3 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 hours ago