ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!

Default Image

ராமநாதபுரத்தில் ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் 844 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

இதனையடுத்து 15,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து பேசிய முதல்வர், ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலன் கிடைத்துள்ளது.

நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும். ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.345 கோடியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணி குறித்து
இராமநாதபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் கொண்டார். இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனிசாமி மனைவி வானதிதேவிக்கு அரசு வேலைக்கான ஆணையை இவ்விழாவில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்