ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.ஆனால் அதிமுகவில் அண்மைக்காலங்களாகவே யார் முதல்வர் வேட்பாளர் ? சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான மோதல் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே அதிகரித்து வருகிறது. செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என்று பிரதமர் மோடியே பாராட்டும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…