நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று நடைபெற்ற பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
நிவர் மற்றும் புரவி புயல் குறித்ததான வெள்ள பாதிப்புகளை அறிந்து கொள்வதற்காக முதல்வர் நேற்று கடலூர் சென்று ஆய்வுகளை முடித்துக்கொண்டு இரவு நாகை வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்று தங்கியிருந்தார். இன்று நாகையில் வெள்ளம் குறித்ததான ஆய்வை துவங்குவதற்கு முன்னதாக நாகை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற காலை நேர பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பங்கேற்றுள்ளார்.
முதல்வருக்கு பேராலயம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன், மாதா சொரூபம் வழங்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி மாதா ஆலய பாதிரியார் அவர்கள் முதல்வருக்கு ஆசி வழங்கியுள்ளார். அதன் பின் மாத சொரூபத்துக்கு தான் கொண்டு வந்திருந்த மாலையை முதல்வர் கொடுத்துள்ளார். அதன் பின் கருங்கண்ணி பகுதியில் விளை நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அருந்தவம்புலம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…