சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

Default Image

சென்னை சிறப்பு அதிகாரி ,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை  மேற்கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.  

தமிழகத்தில் நேற்று  மட்டும் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியது.இதனால் அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்டு வரும் கொரனா பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி  நாளை காலை மாநகராட்சி அலுவலகத்தில் அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி  ராதாகிருஷ்ணன் ,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை  மேற்கொள்ளவுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்