நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல், பல புதிய திட்டங்களை தொடக்கி வைத்தது மட்டுமல்லாமல், அனைத்து துறைகளின் பணியையும் உற்று கவனித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த காவலர்களிடம் அவர் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடம் பின் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பினார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இரவும் பகலும் காவல் காத்து சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்திடும் மகத்தான பணி காவல்துறையினருடையது! அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். வள்ளுவர் வாக்கின்படி முறைசெய்து காப்பாற்றுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…