உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவு.!

Default Image

ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த ஹவில்தார் திருமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமூர்த்தி 173வது படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூலை 26-ம் தேதி அன்று இந்திய எல்லையில் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜூலை 31-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்