சற்று நேரத்தில் கொத்தளத்தில் கொடியேற்ற உள்ள தமிழக முதல்வர்..!

Default Image

74-ஆவது சுதந்திர தினத்தையொட்டிமுதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியேற்றுகிறார். காலை 8.45 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழாவில்  உரையாற்ற உள்ளார்.

அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.  இந்த ஆண்டுக்கான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு சேவையாற்றியவர் விருது , பெண்கள் நலனுக்காக உழைத்தவர்களுக்கான விருது போன்ற விருதுகள் வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவில் கலந்துகொள்ளவர்கள் அமர சமூக இடைவெளியை விட்டு இருக்கைகள் அமைக்கப்ட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்