புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து…!

Default Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில், கிரண்பேடி நீக்கத்தை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வரும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி  அவர்கள், பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்