டிச.1 முதல் 4 வரை இந்தந்த மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் முக்கிய உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும்  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2ம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் டிசம்பர் 4 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஏற்கனவே, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

59 இடங்களில் கனமழை.. 19 இடங்களில் மிக கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

இந்த நிலையில், வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் டிசம்பர் 4ம் தேதி சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிச.3 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், டிச.4 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் கனமழையை ஒட்டி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பெயரை பயன்படுத்த மாட்டோம் .. ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது கூறியதாவது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும். சாலைகள், சுரங்கபாதைகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட மின் மோட்டார்களை வைத்து கொள்ள வேண்டும். சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்பு படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் 8 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

4 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

5 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

6 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

8 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

9 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

10 hours ago