அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 13-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 23-ம் தேதி முதல் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில், அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
அனைத்துத்துறை சார்ந்த செயலாளர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…