ஊரடங்கு தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Default Image

ஊரடங்கு தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்ததையடுத்து, முதல்வர் மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் படிப்படியாக குறைய தொடங்கியது. ஊரடங்கால் கொரோனா குறைய குறைய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தது.

இருந்தபோதிலும் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் போன்றவைகளுக்கு தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை, அதன்படி தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதியோடு முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்