நாளை பயணம் முடிவு.., பிரதமரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

பிரதமர் மோடியை மார்ச் 31-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார். அதைத்தொடர்ந்து டெல்லியில் மார்ச் 31-ஆம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். மார்ச் 31 பகல் ஒரு மணிக்கு பிரதமரை முதல்வர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது ஏப்ரல் 2ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். தற்போது முதல்வர் மேற்கொண்டுள்ள  துபாய் பயணத்தையும் மோசமாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 31-இரவு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்