சாலையோர சென்ற பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மேலும் கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து, வீட்டுக்கு புறப்பட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், அண்ணா சாலையில் சென்றபோது சாலை யோரமாக காரை நிறுத்த சொல்லி, திடீரென முதலமைச்சர் காரைவிட்டு இறங்கி நடந்து சென்று பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கினார். இதுபோன்று ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய, அனைவரும் தவறாமல் முகக்கவசத்தை அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது சிலர் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் முக கவசம் வழங்கி அணிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியது மட்டுமில்லாமல் முகக்கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்துவதற்காக, சென்னை சிம்சன் சந்திப்பில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்தவருக்கு முதலமைச்சரே முகக்கவசம் அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…