மறைந்த முரசொலி சொர்ணத்தின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்….!

Default Image

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த முரசொலி சொர்ணத்தின்  உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

எழுத்தாளர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளர் திகழ்ந்த சொர்ணம் முரசொலி அவர்கள் கடந்த 8-ஆம் தேதி அன்று வயது மூப்பு காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த முரசொலி சொர்ணத்தின்  உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். உருவப்படத்தை திறந்து வைத்த அவர், மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.  மேலும், முரசொலி சொர்ணம் குடும்பத்தினர், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்