‘மீண்டும் மஞ்சப்பை’ – பரப்புரைக்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Default Image

சென்னை:தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சியை,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். 

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கொரோனா தொற்று பரவி வந்ததால்,இந்த தடையை நடைமுறைப்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.எனினும்,மீண்டும் இதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிரமாக பணிகளை துவங்கியுள்ளது.

இந்த நிலையில்,சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள,தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சியை,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்