சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின். 

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் புத்தாண்டின் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து,கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் உரையின் மீதான விவாதம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை ரீதியான அமைச்சர்களின் பதில்கள் இடம் பெற்றன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை சார்ந்த திரு.வைத்திலிங்கம் அவர்கள் பேசும் போது, கொரோனா தடுப்பு பணிகளில் இந்த அரசு துரிதமாக செயல்படுகிறது என்று சொன்னார். அதற்கு முதலில் நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு அதிமுக முழுமையான ஆதரவு தரும் என்று சொன்னதற்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நிறைவு பெற்றுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்