ஆன்மீக அன்பர்கள் முதலமைச்சரை மனதார வாழ்த்துகின்றனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருவிதம்.
தமிழகத்தில் முழு ஊரடங்கிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டுமே கும்பாபிஷேகம் விழாவில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காண்பதற்காக வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
வடபழனி முருகன் கோயிலில் நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வடபழநினி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கொரோனா தொற்று குறையும் போது இறை அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோயில்கள் அனைத்து நாட்களிலும் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
எம்மதமும் சம்மதம் என்று ஆட்சி புரிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்குமானவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். 50-க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதால், ஆன்மீக அன்பர்கள் முதலமைச்சரை மனதார வாழ்த்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…