டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்….!

Default Image

2 நாள் அரசு முறை பயணமாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார்.

இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்களும் உடன் இருந்தார். சாணக்கியாபுரியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை முதல்வர் ஆய்வு செய்தார். முன்னதாக இங்கு புதிய இல்லம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது அரசுமுறை பயணத்தை நிறைவு செய்து, டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்