தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். தமிழக முதல்வரான பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சந்திக்கும் உள்ளார். இந்த சந்திப்பானது இன்று மாலை 5 மணி அளவில், டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்த சந்திப்பின்போது, செங்கல்பட்டு தடுப்பூசி மையம், நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நாளை  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்