சென்னையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு.
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் அதுவும் மாலை 5 மணிக்குள் 20 லட்சத்திற்கு மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமிற்கு சோதனை செய்ய சென்ற முதல்வர், அங்கு பணியில் ஈடுபட்டியிருந்த மருத்துவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்த வந்த பொது மக்களிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக ஈகாட்டுதாங்கள் பகுதியில் அமைப்பட்டுள்ள முகாமையும் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறதது.
இதனிடையே, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது என கூறப்படுகிறது. நேற்று வரை 3.96 கோடி பேர் செலுத்தி இருந்த நிலையில், இன்றைய தடுப்பூசி சிறப்பு முகாமில் இதுவரை 7.39 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர். இதன்படி தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…