கொளத்தூரில் 83 நாட்களில் புனரமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

கொளத்தூரில் 83 நாட்களில் புனரமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

சென்னை,  கொளத்தூரில் புறநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையானது 100 நாட்களில் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில், இந்த மருத்துவமனை ரூ.15.3 கோடி செலவில், 83 நாட்களில் புனரமைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில், 100 படுக்ககைகள் மட்டும் இருந்த நிலையில், தற்போது அதை 300 படுக்கைகளாக தரம் உயர்த்தியுள்ளனர். மேலும், இந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட இந்த அரசு மருத்துவமனையை, தமிழக முதல்வரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்