#BREAKING : நந்தனத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

சென்னை நந்தனத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை நந்தனத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள் தொகுப்பையும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 13,41, 494 பேர் இந்த திட்டம் பயனடைய உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல, 1,29, 444 வெளிமாநில தொழிலாளர்களுக்கான உணவு பொருள் தொகுப்பு மூலம் பயனடையுள்ளனர். இந்த உணவு பொருள் தொகுப்பில் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு ,ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்