உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்த செல்வி நிவேதிதா, செல்வி திவ்யபாரதி, செல்வி ஹரிணி, திரு. நவநீத ஸ்ரீராம் ஆகியோர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், அவர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் உரையாடினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் தேநீர் அருந்தினார். அப்போது அவர்களிடம், உக்ரைன் போரில் மாணவர்களுடைய அனுபவங்கள் குறித்தும், அவர்களுடைய கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.