டோக்கியோ ஒலிம்பிக்ஸில் விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 4-ம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆனால், அரையிறுதி போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் முகஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், பதக்கம் பெற்ற அணியை விட திறமையில் சற்றும் குறையாத அணி இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக்ஸில் முதல்முறையாக மகளிர் பிரிவில் இந்திய ஹாக்கி அரையிறுதி வரை முன்னேறியது. மகளிர் ஹாக்கி பிரிவில் இந்தியாவை முன்னேறச்செய்த நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…