அண்ணா நினைவு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வின் போது முதல்வருடன் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வினை தொடர்ந்து ஒரு தனியார் கார் தொழிற்சாலையை ஆய்வு செய்யும் அவர், அங்குள்ள அதிகாரிகளுடனும் சில ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக காஞ்சிபுரத்துக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.