மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

தேசிய கல்விக் கொள்கை, காவி கொள்கையாக உள்ளது என திருவனந்தபுரம் சிபிஐ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

திருவனந்தபுரம் CPI 24-ஆவது மாநில மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் குறித்து சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தை கொண்டு செய்ய பார்க்கிறது மத்திய அரசு. மாநிலங்கள் பிரச்சனை தொடர்பாக கடிதம் எழுதியும் பதில் வருவதில்லை. மாநிலங்களின் எண்ணங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பினால் அதற்கு உரிய பதில் அளிப்பதில்லை. திமுக, கம்யூனிஸ்ட் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்காக மட்டும் பேசவில்லை, அனைத்து மாநிலங்களுக்காகவும் பேசுகிறோம்.

ஒரே நாடு, ஒரே உணர்வு, ஒரே தேர்தல், இப்படியே போனால் ஒரே நாடு, ஒரே கட்சி என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஏதேசதிகாரத்துக்கு எதிரான குரல்தான் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் குரல். மாநிலங்களை காப்பாற்றுவதே, இந்தியாவை காப்பாற்றுவது என்பதாகும். மாநிலங்களை காப்பாற்றுவது என்பது மாநில மக்களின் உரிமை, மொழி, கலாச்சாரம் உள்ளிவைகளை காப்பாற்றுவது என்பதாகும். தேசிய கல்விக் கொள்கை, காவி கொள்கையாக உள்ளது. சகோதரத்துவம், சமூக நீதியை நிலை நாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒன்றிய அரசு என்று அழைப்பது தேசத்துக்கு எதிரானது என சிலர் கூறுகின்றனர். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியே இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருப்பவர்களை தேச துரோகிகள் என்று சொல்ல வேண்டும். மதம், மொழி, கலாச்சார ரீதியாக மக்களை பிளவுபடுத்துவதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. திராவிட இயக்கம் – கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கான நட்பு என்பது இரு இயக்கங்களும் தோன்றியபோதே உருவானது. மேலும், சோவியத் நாட்டுக்கு சென்றுவந்த பிறகே சுய மரியாதை கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

1 minute ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

8 minutes ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

32 minutes ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

1 hour ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

1 hour ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

2 hours ago