இடைத்தேர்தல் கடைசி நாள் பிரச்சாரம்.! காங்கிரஸுக்கு ஆதரவாக ஈரோடு விரைந்தார் முதல்வர் மு.கஸ்டாலின்.!

Default Image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இன்று கடைசி நாள் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

வரும் திங்கள் கிழமை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் அதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்கிறது. இன்று மாலை 5 மணிக்கு அனைத்து வகையான பிரச்சாரமும் முடிந்து 6 மணிக்கு வெளியூர் ஆட்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடைசி நாள் : இன்று தான் கடைசி நாள் பிரச்சரம் என்பதால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி உள்ளனர். இதில் காங்கிரஸ் சார்பில் திமுக கூட்டணியில் இருந்து களமிறங்கும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

முதல்வர் பிரச்சாரம் : இன்று கடைசி நாள் பிரச்சரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் முக்கியமான இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கை சின்னத்திற்காக வாக்கு சேகரிக்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்