ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

அமைச்சர் மெய்யநாதன் ‘ஸ்போர்ட்ஸ் நாதன்’ ஆகவே மாறிவிட்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சந்தேகங்களை கேட்டறிவதற்காக ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்தார்.

விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிக்கான இணையதள பதிவையும் முதலமைச்சர் தொடக்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக இந்த நேரு விளையாட்டு அரங்கிற்கு நான் வந்துள்ளேன். இதில் இருந்தே விளையாட்டு துறை எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அமைச்சர் மெய்யநாதன் ‘ஸ்போர்ட்ஸ் நாதன்’ ஆகவே மாறிவிட்டார். சுறு சுறுப்பான அமைச்சர் கிடைத்ததற்கு பெருமை பட வேண்டும் என புகழாரம் சூட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்