11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

Default Image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழக எரிசக்திதுறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மின் பகிர்மானங்களையும் அதன் பராமரிப்புக்களையும் எளிதாக்க 11 புதிய மின் பகிர்வு கோட்டங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளன.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தர்மபுரி மாவட்டத்தில் பென்னகரம், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி ஆகிய ஊர்களில் புதிய மின் பகிர்மான கோட்டங்கள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்