பதில் சொல்லுங்க பிரதமரே… அடுக்கடுக்கான கேள்விகளுடன் முதல்வர்.!

Published by
மணிகண்டன்

MK Stalin : பிரதமர் மோடிக்கு 3 கேள்விகள் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கடல் எல்லை பகுதியில் இருந்த கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக கூறி காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கபெற்ற தகவல்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று விளக்கம் அளித்து இருந்தார்.

தற்போது, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் தனது கருத்தை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. காங்கிரசை ஒருபோதும் நம்ப கூடாது என மீண்டும் உறுதியாகியுள்ளது.

கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை நிலைபாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது என்றும் பிரதமர் மோடி தனது எஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை அடுத்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கேள்வி கேட்கும் விதமாக ஓர் பதிவையிட்டு அதில் மூன்று கேள்விகளை குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பதிவில், பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பாமல் இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என அந்த பதிவில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago