புதிதாக துவங்கப்படும் 8 நிறுவனங்களுக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர்!

Default Image

தமிழகத்தில் புதிதாக துவங்கப்படவுள்ள நிறுவனத்திற்கு காணொளி காட்சி மூலம் பந்தக்கால் நட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனாவால் உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்க கூடிய சூழ்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக வெளியில் நடமாட கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.

அவ்வாறு போடப்பட்ட ஒப்பந்தங்களில் தற்பொழுது 8 புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் அடிக்கல் நாட்டு விழாவில் நடத்துகின்றனர். இதன்மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்பட்டுள்ளது. 3185 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த எட்டு நிறுவனங்களின் அடிக்கல் நாட்டு விழாவையும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்