சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நியாய விலை கடையில் முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூ.1000 பொங்கல் பரிசாக தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று மகளிர் உரிமை தொகை… போனை செக் பண்ணிக்கோங்க..!
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் 13-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. 13-ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகை பெறாதவர்கள் 14ஆம் தேதி பொங்கல் பரிசு பெறலாம் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தரப்படுகிறது. பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2,436 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழக முழுவதும் 2. 19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…