கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களான சேலம், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முதல்வர் மு.கஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தில்கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வரும் 24 ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் சில மாவட்டங்களில் மிக அதிக அளவில் காணப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படக்கூடிய சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…