செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என முதல்வர் கூறியுள்ளார்-அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Default Image

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை அரசு ஊரடங்கு நீடித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். கட்- அவுட், பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுகதான்.

போஸ்டர் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு, திமுகவினர் இதனை கடைபிடிக்க வேண்டும். ஆளும் கட்சி என்பதால் விதிமுறைகளை பின்பற்ற கூடாது என்று கிடையாது. மேலும், செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றுதான் முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்த முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்கவுள்ளது. பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்