கடந்த மாதம் 17மற்றும் 18-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தூத்தூக்குடி , நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது தான் தூத்தூக்குடி , நெல்லை மாவட்டங்கள் பழைய நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவைகுண்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது சென்னை- திருச்செந்தூர் ரயில் சிக்கிக்கொண்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் தண்டவாளத்தின் வழியாக தாதன்குளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு கொடுத்து உதவி வழங்கிய கிராம மக்கள் அவர்களை செய்துங்கநல்லூர் கிராமத்திற்கு பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்.
ரயிலில் பயணித்து வந்தவர்களுக்கு உணவு கொடுத்து பத்திரமாக வழிஅனுப்பி வைத்த கிராம மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.15,000 தொகையை வெகுமதியாக அளித்தனர். அந்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாதன்குளம் கிராம மக்கள் கொடுத்தனர். அதன்படி, தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் ரூ.15,000 தொகையை தாதன்குளம் கிராம மக்கள் வழங்கினர். அப்போது தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் பாலக்காடு ரயிலை தாதன்குளத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…