முதலமைச்சர் எடப்பாடி தொகுதியில் 7-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்புமனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி போட்டியிட்டார். 6 முறை எடப்பாடி தொகுதியில் முதல்வர் போட்டியிட்டு 4 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் பெற்றுள்ளார். 1977-முதல் அதிமுக, பாமகவே மாறி மாறி எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று வருகின்றனர். 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றியும், 2006, 1996 ஆகிய தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார்.
1989-ல் எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…