சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் 14.44 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களை இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து, 137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பில் முன்னணி மாவட்டமாகத் திகழ்கிறது. கொரோனாவின் தாக்கமும் நாமக்கல்லில் கட்டுக்குள் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
நாமக்கல் மாவட்டம் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் என்று சொன்னாலும் மிகை ஆகாது எனக் கூறிய அவர்,கல்வியில் சிறந்து விளங்க கூடிய மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் தான் திகழ்கிறது. இந்நிலையில், தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.