தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொழில்முனைவோர் எளிதில் மனைகள் வாங்கிடும் வகையில் விலையை குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இவ்வரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீளவும் வழிவகை செய்யும் பொருட்டு தற்போது. தொழில்மனைகளின் விலையை குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 1,19,79,000/-லிருந்து 75% குறைத்து ரூபாய் 30,81,200/-, கும்பகோணத்தில் ரூபாய் 3,04,92,000/-லிருந்து 73% குறைத்து ரூபாய் 81,89,300/ மற்றும் நாகப்பட்டினத்தில் ரூபாய் 2,39,71,500/-லிருந்து சுமார் 55% குறைத்து ரூபாய் 85,35,800/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய மனைமதிப்பிலிருந்து ஏக்கர் ஒன்றிற்கு கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சியில் ரூபாய் 9.0 கோடியிலிருந்து 4.8 கோடி குறைத்து ரூபாய் 4.2 கோடியாகவும், திருப்பத்தூர் மாவட்டம், விண்ணமங்கலத்தில் ரூபாய் 4.8 கோடியிலிருந்து ரூபாய் 2.8 கோடி குறைத்து ரூபாய் 2 கோடியாகவும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்தூரில் ரூபாய் 6 கோடியிலிருந்து ரூபாய் 2.5 கோடி குறைத்து ரூபாய் 3.5 கோடியாகவும் மற்றும் ஈரோடு தொழிற்பேட்டையில் ரூபாய் 6.4 கோடியிலிருந்து ரூபாய் 2.6 கோடி குறைத்து ரூபாய் 3.8 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைமதிப்பினால் பல வருடங்களாக குறைவாண மனைகளே ஒதுக்கீடு செய்யப்பட்டு 400-க்கும் மேற்பட்ட காலி தொழில்மனைகளை கொண்ட காரைக்குடி, பிடாநேரி, இராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 30% முதல் 54% வரையிலும் மற்றும் விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 40% முதல் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பும் சுமார் 5% முதல் 25% 19 வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 12 தொழிற்பேட்டைகளுக்கு 2016-2017-ஆம் ஆண்டில் இருந்த மனைமதிப்பே நடப்பாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பத்தூர் மற்றும் திருமழிசை தொழிற்பேட்டைகளுக்கு நடப்பிலுள்ள நடைமுறைகளின்படி ஏக்கர் ஒன்றிற்கு முறையே ரூபாய் 43,86,16,300/-, ரூபாய் 13,41,09,300/- என நிர்ணயம் செய்யப்பட வேண்டியதற்கு மாறாக 2016-2017-ஆம் ஆண்டின் ரூபாய் 25,07,79,100/-, ரூபாய் 7,56,77,400/- என்ற மனைமதிப்பே 2020-2021-ஆம் ஆண்டிற்க்கான மனைமதிப்பாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…