சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்றும் இன்று பிரமாண்டமாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் உலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர் என பலரும் பங்கேற்றனர். ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதன்படி, இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை சேர்த்து மொத்தமாக, 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது.
ரூ.6.64 லட்சம் கோடி… முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி – முதலமைச்சர் உரை!
உலகமே வியக்கும் வகையில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சென்னையில் நடந்த 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மகத்துவம் என்னென்றும் பேசப்படும் என்றார்.
மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும் என்றும் இந்த சிறப்பு குழு ஒப்பந்தங்களை செயல்படுத்தும் நோக்கில் செயல்படும் எனவும் அறிவித்தார். மேலும், முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை தொடர்ந்து கண்காணிப்பேன் எனவும் தெரிவித்தார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…