தலைமை நீதிபதி ஏ. பி சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடியேற்றினார்!

Default Image

தலைமை நீதிபதி ஏ பி சாஹி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலை அருகில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஏ. பி சாஹி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்பு மத்திய தொழிலக பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மத்திய மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் ,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ் உள்ளிட்டோர் பாதுகாப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்