சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசனம் மறுப்பு புகார்.! கண்காணிப்பு குழுவை நியமித்த அறநிலையத்துறை.!

Default Image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பவர்களை கண்காணிக்க இந்து அறநிலையத்துறை கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது.  

சிதம்பரம் நடராஜர் கோவிலில், பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் 2 வருடங்களாக மட்டும் அந்த கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னரும் இந்த தடை அங்குள்ள தீட்சிதர்களால் தொடர்ந்ததால், இந்த பிரச்னை உயர்நீதிமன்றம் வரை சென்றது. அங்கு கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பு வெளியானது.

பின்னர் தமிழக அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன் பிறகு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அண்மையில் மீண்டும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அங்குள்ளவர்களால் மறுப்பு தெரிவிக்கப்படுவதாகபுகார்கள் எழுந்தது.

இதனை அடுத்து, இந்து அறநிலையத்துறை புதிய கண்காணிப்பு குழுவை நியமித்தது. 5 பேர் அடங்கிய குழு ஆளுக்கு ஒரு நாள் கண்காணிக்க வேண்டும். யாரேனும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யும் பக்தர்களை தடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என அந்த குழுவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்